» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் : ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

செவ்வாய் 18, மே 2021 5:55:18 PM (IST)

ஆந்திராவில், கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த ஒவ்வொரு குழந்தைகளின் பெயரில் வங்கியில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் கரோனா பாதிப்பை குறைக்க மே மாதம் இறுதிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமப் புறங்களில் வைரஸ் பரவுவதை தடுக்க முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திராவில் பெரும் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது. அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் வங்கியில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்யப்படும். 

வங்கியுடன் ஒப்பந்தம் செய்த பின்னர் குழந்தைகளின் பெயரில் ரூ .10 லட்சம் டெபாசிட் செய்யப்படும். குழந்தைக்கு 25 வயதாகும் வரை இந்த பணம் வங்கியில் இருக்கும். இந்த பணத்திலிருந்து ஒவ்வொரு மாதமும், குழந்தையின் பாதுகாவலருக்கு 5-6% வட்டி வழங்கப்படும். இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று, கரோனா தொற்றால் பலியானவர்களின் இறுதி சடங்கிற்கு தலா ரூ.15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory