» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கடத்தப்பட்ட வீரரை விடுவிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : மாவோயிஸ்டுகள் அறிக்கை
புதன் 7, ஏப்ரல் 2021 5:22:08 PM (IST)
சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட வீரரை விடுதலை செய்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.இந்த தாக்குதலின் போது சி.ஆர்.பி.எஃப் கோப்ரா கமாண்டோ பிரிவை சேர்ந்த கான்ஸ்டபிள் ரகேஷ் சிங் மாஹாஸ் என்பவரை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றனர். அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) புதன்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 3 ம் தேதி நடந்த என்கவுன்டரில் 24 பாதுகாப்புப் வீரர்கள் உயிர் இழந்தனர். 31 பாதுகாப்புப் வீரர்கள் காயமடைந்தனர். ஒரு வீரர் தங்கள் காவலில் இருக்கிறார். அவரை விடுதலை செய்ய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சிபிஐ (மாவோயிஸ்ட்) தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்டுகளின் தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழு வெளியிட்ட இந்த இரண்டு பக்க கடிதத்தில், மாவோயிஸ்டுகளை ஒழிப்பதற்காக 2000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர், அதைத் தொடர்ந்து எதிர் தாக்குதல் கொடுக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், என்கவுண்டரில் நான்கு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். என்கவுண்டரில் கைப்பற்றப்பட்ட வீரரை விடுவிப்பதற்கு மாநில அரசு ஒரு மத்தியஸ்தரை அறிவிக்க வேண்டும். காவல்துறை வீரர்கள் தங்கள் எதிரிகள் அல்ல என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவிற்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்: பினராயி விஜயன் கோரிக்கை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:44:03 PM (IST)

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:22:18 PM (IST)

மம்தா பானா்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை : தோ்தல் ஆணையம் உத்தரவு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 10:28:14 AM (IST)

கரோனா 2ஆம் அலை தீவிரம் : உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு உணவு வழங்க கட்டுப்பாடு
திங்கள் 12, ஏப்ரல் 2021 5:46:18 PM (IST)

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
திங்கள் 12, ஏப்ரல் 2021 5:18:18 PM (IST)

கர்நாடகத்தில் தேவை ஏற்பட்டால் பொதுமுடக்கம் அமல் : முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு
திங்கள் 12, ஏப்ரல் 2021 3:48:20 PM (IST)
