» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: குடியரசு தலைவர் திறந்து வைத்தார்
புதன் 24, பிப்ரவரி 2021 5:26:07 PM (IST)

அகமதாபாத்தில் நவீன் வசதிகளுடன் கட்டப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். இந்த மைதானத்தில் முதல் போட்டியாக இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜு மற்றும் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அகமதாபாத்தின் மோட்டேராவில் சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி பூமி பூஜை செய்தனர். அகமதாபாத் சபர்மதி நதிக்கரை ஓரம் கடந்த 1982ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த சர்தார் வல்லபாய் படேல் மோதிரா மைதானம் கடந்த 2015ம் ஆண்டு இடிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. மோட்டேரா ஸ்டேடியம் என்று இருந்த பெயரை "நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த மைதானம் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மைதானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. பயிற்சிக்கென தனித்தனியே 2 மைதானங்கள் பெவிலியனுடன் அமைக்கப்பட்டுள்ளது. 49,000 ரசிகர்கள் அமரும் வகையில் இருந்த இந்த மைதானம் தற்போது ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது. 8 செ.மீ. மழை பெய்தாலும் கூட அடுத்த சில மணி நேரத்தில் போட்டியை நடத்தும் வகையில் வடிகால் வசதி உள்ளது. மின்விளக்கு கோபுரங்களுக்கு பதிலாக மேற்கூரைகளின் விளிம்பில் எல்இடி விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதனால் மைதானத்தில் நிழல் விழாது. 4 டிரஸ்சிங் ரூம், நீச்சல் குளம், பிரமாண்ட உணவகம் உள்ளிட்டவை உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவிற்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்: பினராயி விஜயன் கோரிக்கை
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:44:03 PM (IST)

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்பு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 4:22:18 PM (IST)

மம்தா பானா்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை : தோ்தல் ஆணையம் உத்தரவு
செவ்வாய் 13, ஏப்ரல் 2021 10:28:14 AM (IST)

கரோனா 2ஆம் அலை தீவிரம் : உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு உணவு வழங்க கட்டுப்பாடு
திங்கள் 12, ஏப்ரல் 2021 5:46:18 PM (IST)

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
திங்கள் 12, ஏப்ரல் 2021 5:18:18 PM (IST)

கர்நாடகத்தில் தேவை ஏற்பட்டால் பொதுமுடக்கம் அமல் : முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு
திங்கள் 12, ஏப்ரல் 2021 3:48:20 PM (IST)

நான் தமிழன்Feb 25, 2021 - 07:58:37 AM | Posted IP 162.1*****