» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மனைவி பிரிந்து சென்றதால் 18 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது
வியாழன் 28, ஜனவரி 2021 12:19:40 PM (IST)
ஐதராபாத்தில் மனைவி பிரிந்து சென்றதால் 18 பெண்களை கொலை செய்த கொடூர சீரிய கொலைகாரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், ஐதராபாத்தை சேர்ந்த மைனா ராமுலு என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் மீது ஏற்கனவே 16 கொலை வழக்குகள் உட்பட 21 வழக்குகள் உள்ளன. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தனது மனைவி பிரிந்து சென்ற பிறகு, ஆத்திரத்தில் தொடர் கொலைகளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
பெண்களை ஏமாற்றி அவர்களின் வீட்டுக்கு செல்லும் மைனா ராமுலு, அவர்களுடன் மது அருந்திய பின் அவர்களை கொலை செய்து வந்தது தெரியவந்துள்ளதாக ஐதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். 2003ம் ஆண்டு முதல் அந்த நபர் 18 பெண்களை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்: மம்தா பானர்ஜி
வியாழன் 25, பிப்ரவரி 2021 10:35:34 AM (IST)

திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி தங்க சங்கு- சக்கரம் : தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:49:52 AM (IST)

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: குடியரசு தலைவர் திறந்து வைத்தார்
புதன் 24, பிப்ரவரி 2021 5:26:07 PM (IST)

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதன் 24, பிப்ரவரி 2021 4:59:08 PM (IST)

இந்திய டாக்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கும் : பிரதமர் மோடி பெருமிதம்
புதன் 24, பிப்ரவரி 2021 8:42:54 AM (IST)

காவிரி-வைகை இணைப்பு திட்டத்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம்
புதன் 24, பிப்ரவரி 2021 8:41:00 AM (IST)
