» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி
செவ்வாய் 26, ஜனவரி 2021 9:50:25 PM (IST)

மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையே டெல்லி வன்முறைக்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த மூன்று மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் உச்சகட்டமாக குடியரசு தினமான செவ்வாயன்று விவசாயிகள் மாபெரும் ட்ராக்டர் பேரணி நடத்தினர். ஆனால் பேரணியானது டெல்லிக்குள் நுழைந்த பின்னர் பல இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டதுடன் விவசாயி ஒருவரும் பலியானார்.
இந்நிலையில் விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் அவர்கள் காட்டிய பாரபட்சமான அணுகுமுறையுமே டெல்லி வன்முறைக்கு காரணமாகும். எனவே விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்த மத்திய அரசு உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்: மம்தா பானர்ஜி
வியாழன் 25, பிப்ரவரி 2021 10:35:34 AM (IST)

திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி தங்க சங்கு- சக்கரம் : தமிழக பக்தர் காணிக்கையாக வழங்கினார்
வியாழன் 25, பிப்ரவரி 2021 8:49:52 AM (IST)

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: குடியரசு தலைவர் திறந்து வைத்தார்
புதன் 24, பிப்ரவரி 2021 5:26:07 PM (IST)

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதன் 24, பிப்ரவரி 2021 4:59:08 PM (IST)

இந்திய டாக்டர்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கும் : பிரதமர் மோடி பெருமிதம்
புதன் 24, பிப்ரவரி 2021 8:42:54 AM (IST)

காவிரி-வைகை இணைப்பு திட்டத்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம்
புதன் 24, பிப்ரவரி 2021 8:41:00 AM (IST)
