மீகாமனில் ஆர்யாவுடன் நெருக்கமாக ஹன்சிகா

மீகாமனில் ஆர்யாவுடன் நெருக்கமாக ஹன்சிகா
பதிவு செய்த நாள் செவ்வாய் 19, ஆகஸ்ட் 2014
நேரம் 8:18:44 PM (IST)

நெருக்கமான காட்சியில் நடித்துவிட்டு கதறி அழுத ஹன்சிகா ஆர்யாவுடன் நெருக்கமான காதல் காட்சியில் நடித்த நடிகை ஹன்சிகா, ஒரு மூலையில் உட்கார்ந்து கதறி அழுதார். அவரை, டைரக்டர் மகிழ்திருமேனி சமாதானப்படுத்தினார். ஆர்யாவும், ஹன்சிகாவும் மீகாமன் என்ற படத்தில் முதன்முதலாக ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தில், ‘‘காமம் என்பது ரொம்ப வலியானது. ஆனாலும் சுகமானது’’ என்ற பாடல் காட்சி இடம்பெறுகிறது. பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். பாடல் காட்சியில் ஆர்யாவும், ஹன்சிகாவும் நடித்தார்கள். கதைப்படியும், பாடல் வரிகளின்படியும் இந்த பாடல் காட்சியை கவர்ச்சிகரமாக படமாக்கினார்கள். ஹன்சிகாவை இதுவரை வேறு எந்த கதாநாயகனுடனும் நடித்திராத அளவுக்கு ஆர்யாவுடன் மிக நெருக்கமாக நடிக்க வைத்தார்கள். பாடல் காட்சி படமாக்கி முடிக்கப்பட்டதும் ஹன்சிகா ஒரு மூலையில் உட்கார்ந்து கதறி அழுதார். பதறிப்போன டைரக்டர் மகிழ்திருமேனி, ‘‘என்ன ஆனது?’’ என்று கேட்டார்.



Thoothukudi Business Directory